பழுதான சிக்னலால் விபத்து அபாயம்

Update: 2026-04-26 17:29 GMT

பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கல்வி, வேலை உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் பஸ் நிலையத்திற்கு வருகின்றனர். இந்த நிலையில், பஸ் நிலையம் முன்புள்ள சிக்னல் விளக்குகள் கடந்த சில வாரங்களாக எரியவில்லை. இதனால் சாலையை கடக்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். அவ்வப்போது விபத்துகளும் ஏற்படுகிறது. இதுகுறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சிக்னல் வேலை செய்யாததால் கோவை - திருச்சி மெயின் ரோட்டில் மேற்கு மற்றும் கிழக்கு திசைகளை நோக்கி வரும் வாகனங்கள் மற்றும் பஸ் நிலையத்திற்குள் செல்லும் வாகனங்கள் ஒருவருக்கொருவர் முந்தி செல்ல முயல்வதால் பஸ்நிலையம் முன்பு எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளும் ஏற்படுகிறது. இதனால் டிரைவர்களுக்கும் பொதுமக்களுக்கும் தகராறு ஏற்படுகிறது. எனவே பழுதான சிக்னலை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்