சங்ககிரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மின்தூக்கி பழுதடைந்துள்ளதால் மேல்தளத்தில் உள்ள நீதிமன்றங்களுக்கு செல்லும் வழக்காடிகள், வாகன விபத்து வழக்குகளில் ஆஜராக செல்பவர்கள், வயதானவர்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே நீதித்துறை நிர்வாகமும், சேலம் மாவட்ட நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுத்து அனைத்து தரப்பினருக்கும் உதவும் வகையில் லிப்ட்டை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.