ஆபத்தான குடிநீர் குழாய் தொட்டி

Update: 2026-04-26 06:55 GMT

களியல்-அழகியபாண்டியபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் தண்ணீர் குழாய் சாலையோரங்களில் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாய்கள் பதிக்கப்பட்டுள்ள பகுதியில் அவை சேதமடைவதை தடுக்கும் வகையில் காற்று வெளியேறும் வகையில் வால்வுகள் மற்றும் காற்றுக்குழாய்கள் தொட்டி வடிவில் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தொட்டிகள் மற்றும் அதன் மேல் பகுதியில் தரமற்ற சிமெண்டு சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலாப்புகள் பல இடங்களில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் விபத்திற்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. குலசேகரத்திலிருந்து திற்பரப்பு செல்லும் சாலையில் மாஞ்சக்கோணம் பகுதியில் இதேபோல் தொட்டியில் சிலாப்பு சேதமடைந்து காணப்படுகிறது. அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தேவசகாயம், குலசேகரம்.

மேலும் செய்திகள்