கடமலைக்குண்டுவில் உள்ள மயானத்தை ஆக்கிரமித்து செடி-கொடிகள் வளர்ந்துள்ளன. இதனால் மயானத்துக்குள் செல்லவே பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். மேலும் இறந்தவர்களுக்கு இறுதிசடங்கு செய்யமுடியாமலும் தவிக்கின்றனர். எனவே புதர்மண்டி கிடக்கும் மயானத்தை உடனே சுத்தப்படுத்த வேண்டும்.