கோழிப்பண்ணையால் சுகாதார சீகேடு

Update: 2026-03-08 15:20 GMT

நெல்லை அருகே சுத்தமல்லி செல்லும் வழியில் சாஸ்திரி நகர் அருகில் இருக்கும் தீன்நகர் பகுதியில் ஒரு கோழிப்பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் கோழிகளுக்கு இறைச்சி கழிவுகள் உணவாக போடப்படுவதால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அங்குள்ள தீன்நகர், பெத்தேல்நகர், சத்யாநகர் பகுதிகளில் காற்று பலமாக வீசும்போது துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், பறவைகள் அங்கு மிச்சம் இருக்கும் கழிவுகளை தூக்கி வந்து வீடுகள் மீது வீசிச்செல்கின்றன. எனவே, அந்த பகுதியில் தொற்றுநோய் பரவுவதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்