ஓசூர் மாநகராட்சி 6-வது வார்டுக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ. காலனி 3-வது கிராஸ் பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக சாலையில் பள்ளம் தோண்டி தொட்டி மற்றும் குழாய்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பணி முடிந்தும் சாலையை சமன் செய்யாமலும், பள்ளத்தை சரியாக மூடவில்லை. மேலும் அப்பகுதியில் குடிநீர், கழிவுநீர் குழாய்கள் உடைந்து சேதமடைந்ததால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் தினமும் மாநகராட்சி வினியோகிக்கும் குடிநீர் வீணாக வெளியேறி சாலையில் தேங்கி நிற்கிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இதில் கவனம் செலுத்தி உடைந்த குழாய்கள், சாலையை சீரமைக்க வேண்டும்.