விருதுநகர் அருகே சத்திரரெட்டியபட்டி வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முற்றிலும் சேதமடைந்து எப்போதும் விழும் என்ற நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியினர் அச்சத்தில் உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நீர்த்தேக்க தொட்டியை சீரமைத்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.