சென்னை துரைப்பாக்கம் ராஜ் நகர் 2-வது தெருவில் சில வாரத்திற்கு முன்பு தார் சாலை போடப்பட்டபோது அங்கிருந்த மின்பெட்டியின் மின்வயர்கள் சாலையில் போடப்பட்டன. இதுதொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் கடந்த வாரம் படத்துடன் செய்தி வெளியானது. சம்பந்தப்பட்ட துறைசார்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக அந்த மின்பெட்டியை நகர்த்தி வைத்து மின்வயர்கள் சாலையில் கிடக்காதவாறு வைத்தனர். உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், அதற்கு தூண்டுதலாக நின்ற 'தினத்தந்தி' பத்திரிகைக்கும் அப்பகுதி பொதுமக்கள் பாராட்டை தெரிவித்துள்ளனர்.