விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் - சங்கரன்கோவில் முக்கு பகுதியிலிருந்து புதிய பஸ் நிலையம் வரையிலான சாலை விரிவாக்க பணி தொடங்கப்பட்டு மெதுவாக நடைபெற்று வருகிறது. இதனால் ராஜபாளையத்தின் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகளவில் ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு மேற்கண்ட சாலை விரிவாக்க பணியினை விரைந்து முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?