பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2026-06-14 11:12 GMT

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்து ஆத்தூர் செல்லும் வழியில் புடலாத்தி கைகாட்டியில் பஸ் நிறுத்தம் உள்ளது. இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்த பயணிகள் நிழற்குடை சிதிலமடைந்ததை அடுத்து, புதிய பயணிகள் நிழற்குடை கட்டுவதற்காக பழைய நிழற்குடையை இடித்து அகற்றினர். இந்நிலையில் இன்னும் புதிய நிழற்குடை அமைக்காததால், பயணிகள் கடும் வெயிலிலும், மழையிலும் பஸ்சுக்காக காத்து நிற்கின்றனர். எனவே பயணிகள் நலன்கருதி இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்