தடுப்பணையை சீரமைக்க வேண்டும்

Update: 2026-08-16 19:32 GMT

சோளிங்கரை அடுத்த கொடைக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட தளவாய்பட்டறை கிராமத்துக்கு செல்லும் வழியில் கால்வாயில் அமைந்துள்ள தடுப்பணை பல ஆண்டுகளாகப் பராமரிப்பின்றி முழுமையாக சேதமடைந்துள்ளது. தடுப்பணையின் பக்கவாட்டு சுவர்கள் தண்ணீர் தடுப்புச்சுவர், தரை தளம் சேதமடைந்து, கருங்கற்கள் சிதறிக்கிடப்பதால் மழைக்காலங்களில் தடுப்பணையில் தண்ணீர் தேங்காமல் முழுவதுமாக வெளியேறி வருகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயராமல் அப்பகுதி விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சேதமடைந்த தடுப்பணையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பார்த்தசாரதி, தளவாய்பட்டறை.

மேலும் செய்திகள்