கடலூா் அரசு மருத்துவமனையில் பொதுக்கழிப்பறை கட்டிட வசதி இல்லை. இதன் காரணமாக அங்கு வரும் பொதுமக்கள், நோயாளிகள் கட்டண கழிப்பறையை உபயோகப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே மக்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து பொதுக்கழிப்பறை கட்டிடம் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.