கோவில்பட்டியில் உள்ள ராமசாமி தாஸ் பூங்காவில் தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் வருகின்றனர். இங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்துள்ளது. சுகாதார வளாகம் சரிவர பராமரிக்கப்படாததால் மிகவும் அசுத்தமாக கிடக்கிறது. குழந்தைகள் இங்கு அதிகளவில் வருவதால் அவர்களுக்கு நோய் தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளது. வாரம் ஒருமுறையாவது இந்த சுகாதார வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டுகிறேன்.