சாலையில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகள்

Update: 2026-08-16 18:04 GMT

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 4-வது வார்டு உள்ளது. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், விக்னேஷ்வரா நகர் 5-வது வீதியில் கழிவுநீர் கால்வாயில் இருந்து அள்ளப்படும் குப்பைகளை சாலையின் ஓரத்தில் வைக்கின்றனர். இதனால் குப்பையில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் அந்த குப்பைகளை நாய்கள், கோழிகள் மீண்டும் கால்வாய்க்குள் கிளறி விடுகின்றன. அதனால் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கால்வாய் நிரம்பி கழிவு நீர் சாலையில் பாய்கிறது. கால்வாய் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்