ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டணத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆஸ்பத்திரியில் எக்ஸ்ரே கருவி எந்திரங்களில் அடிக்கடி பழுது ஏற்பட்டு இயங்காமல் போகிறது. இதனால் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வரும் எண்ணற்ற நோயாளிகள் சிரமமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட ஆஸ்பத்திரியில் பழுதடைந்து கிடக்கும் எக்ஸ்ரே கருவியை மாற்றி புதிய கருவி கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.