ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ராஜவீதி கமால் முஸ்தபா தெருவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் தெருநாய்கள் சாலையில் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. மேலும் இந்த தெருநாய்கள் அப்பகுதியில் செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி சென்று கடிப்பதுடன் விபத்தையும் ஏற்படுத்துகின்றன. எனவே மாவட்ட நிர்வாகம் மேற்கண்ட பகுதியில் தொல்லை தரும் தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும்.