பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா, கொட்டரை மருதையாறு நீர்த்தேக்கத்தின் உள்பகுதி மற்றும் கரைகளில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து புதர் மண்டி காணப்படுகின்றன. இவை நீர்த்தேக்கத்தின் கொள்ளளவைக் குறைப்பதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உறிஞ்சி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. வரும் மழைக்காலத்திற்கு முன்பாக இந்த மரங்களை முற்றிலும் அகற்றாவிட்டால், நீர்த்தேக்கத்தில் தண்ணீரை முழுமையாகச் சேமிக்க முடியாத சூழ்நிலை உருவாகும். எனவே, இந்த சீமைக்கருவேல மரங்களை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.