தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும்

Update: 2026-06-14 14:14 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி ஆர்.பி.காட்டூர் பகுதியில் தெருநாய்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தெருநாய்கள் சாலையில் நடந்து செல்லும் சிறுமிகள், பள்ளிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடிக்க தெருநாய்கள் துரத்துகின்றன. மேலும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களையும் நாய்கள் கடிக்க பாய்கின்றன. இதனால் சில நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் கீழே விழும் சம்பவங்களும் நடக்கின்றன. எனவே ஆர்.பி.காட்டூர் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடித்து கட்டுக்குள் கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்