பள்ளியில் மரங்கள் வெட்டி விற்பனை

Update: 2026-08-16 20:20 GMT

பேரணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் மின் வயர் மரக்கிளையில் உரசியது. கிளையை மட்டும் வெட்டாமல் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி வளாகத்தில் உள்ள 6 வேப்ப மரங்களை வெட்டி செங்கல் சூளைக்கு விற்று விட்டதாகக் கூறப்படுகிறது. அரசு பள்ளியில் உள்ள மரங்களை பள்ளி தலைமை ஆசிரியர்களே வெட்டி விற்றால் எந்த மரமும் இருக்காது. எனவே அரசு பள்ளிகளில் மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க வேண்டும். அத்துடன் பள்ளியில் மரங்கள் வெட்டப்பட்டதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராஜன், பேரணாம்பட்டு. 

மேலும் செய்திகள்