பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட குதிரைவட்டம் பகுதியில் சாலையோரத்திலும், வீடுகளின் அருகிலும் ஏராளமான மரங்கள் காணப்படுகின்றன. இதில் சில மரங்கள் பட்டுப்போன நிலையில் வலுவிழந்து காணப்படுகின்றன. அவற்றின் கிளைகள் அவ்வப்போது முறிந்து வீடுகள் மற்றும் வாகனங்கள் மீது விழுந்து வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பு இல்லாத சூழலில் வசித்து வருகின்றனர். எனவே அந்த மரங்களை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.