திண்டிவனம் ராஜாங்குளத்தின் சுற்றுச்சுவரில் உள்ள இரும்புக்கம்பிகளை சமூக விரோதிகள் திருடிச் சென்று விற்று வருகின்றனர். மேலும் அப்பகுதிகளில் மது அருந்துவது, பாட்டில்களை அங்கேயே உடைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.