ஆபத்தான பயணிகள் நிழற்குடை

Update: 2026-02-22 13:07 GMT

கரூர் மாவட்டம் புகழூர் வட்டம் புஞ்சை தோட்டக்குறிச்சி பேரூராட்சிக்குட்பட்ட பிலீப் நகர் பகுதியில் மெயின் ரோட்டில் பஸ் நிறுத்த நிழற்குடை உள்ளது. இந்த நிழற்குடை அமைக்கப்பட்டு 25 வருடங்களுக்கு மேல் ஆவதால், தற்போது முன் பகுதி இடிந்து இருக்கைகளும் சேதம் அடைந்துள்ளது. மேலும் மேற்கூரை மற்றும் சுற்றுச்சுவர்களில் வெடிப்பு ஏற்பட்டு சிமெண்டு பூச்சுகள் உதிர்ந்து ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இதனால் இங்கு பஸ் ஏற வரும் பயணிகள் நிழற்குடைக்குள் நிற்க அச்சப்பட்டு வெளியில் நின்று பஸ் ஏறி செல்கின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்