சீரமைப்பார்களா?

Update: 2026-02-22 12:40 GMT

பார்வதிபுரம் மேம்பாலத்தில் மார்த்தாண்டம் மார்க்கமாகச் செல்லும் பயணிகளுக்காக பஸ் நிறுத்தமும், நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிழற்குடையில் பயணிகள் அமர்வதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் உடைந்த நிலையில் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. இதனால் அங்கு வரும் பயணிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பயணிகள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த இருக்கைகளை சீரமைப்பார்களா?.

-தேவசகாயம், குலசேகரம்.

மேலும் செய்திகள்