திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி வட்டம் திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள பெரியகளக்காட்டூர் ஊராட்சியில் உள்ள சின்னகளக்காட்டூர் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி , கிராம நிர்வாக அலுவலகம் , அங்கன்வாடி மையம் ஆகியவை உள்ளன. இந்த பகுதிகளில் நுழைவு வாயில் அமைக்கப்படாததால் இரவு நேரங்களில் மர்ம நபர்கள் அங்கு மதுஅருந்திவிட்டு மதுபாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். இதனால் மாணவ-மாணவிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நுழைவு வாயில் அமைக்கவேண்டி ஊர் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.