தூர்வார வேண்டும்

Update: 2026-05-31 07:41 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு 1-வது வார்டு பகுதியில் அமைந்துள்ள ஆளூர் குளத்தை சுற்றுவட்டார பகுதி சேர்ந்த மக்கள் குளிப்பதற்கும், விவசாய தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். தற்போது குளத்தில் தண்ணீர் வறண்டு காணப்படுவதுன், செடிகொடிகள் வளர்ந்தும், ஆகாய தாமரை செடிகள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது. பருவ மழை தொடங்கும் முன் குளத்தில் வளந்துள்ள செடிகளை அகற்றி தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-‌வேணு, ஆளூர்.

மேலும் செய்திகள்