வேர்கிளம்பி பேரூராட்சிக்கு உட்பட்ட வடக்கனாடு சந்திப்பு பகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாயில் பல்வேறு பகுதிகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகள், இறைச்சி கழிவுகள், மருத்துவ கழிவுகள் ஆகியவை கொட்டப்பட்டு தேங்கி நிற்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்ட வருவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கால்வாய் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கால்வாயில் காணப்படும் கழிவுகளை அகற்றிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பிராங்கிளின், வடக்கனாடு.