தூர்வார வேண்டும்

Update: 2026-02-15 07:50 GMT

மண்டைக்காடு கோவில் மாசி திருவிழா அடுத்த மாதம்(மார்ச்)நடைபெற உள்ளது. இதில் கேரளா மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மண்டைகாடு முதல் குளச்சல் வரையிலான ஏ.வி.எம். கால்வாயில் செடிகொடிகள் வளர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. மேலும், சமூக விரோதிகள் மது குடித்து விட்டு கால்வாயில் பாட்டில்களை வீசிவிட்டு செல்கிறார்கள். இதனால் கால்வாய் சுகாதார சீர்கேட்டுடன் காணப்படுகிறது. எனவே, திருவிழாவிற்கு முன் கால்வாய்யை தூர்வாரி தூய்மை படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அமீன், குளச்சல்.

மேலும் செய்திகள்