தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சிக்கு உட்பட்ட பஸ் நிலையத்தில் மணிக்கூண்டு இல்லை. இதனால் எந்த நேரத்தில் எந்த பஸ் வந்து போகிறது என தெரியாமல் பயணிகள் குறிப்பாக முதியவர்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் நிலையத்தில் மணிக்கூண்டு அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.