கடமலைக்குண்டுவை அடுத்த மயிலாடும்பாறை ஊராட்சி அலுவலகத்துக்காக அப்பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை அந்த கட்டிடம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் அதிகாரிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே புதிய கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.