சித்தோட்டில் உள்ள ஈரோடு ஊராட்சி ஒன்றிய ெதாடக்கப்பள்ளி மற்றும் மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள தெருவில் பல தெருநாய்கள் சுற்றித்திரிந்து தொல்லை கொடுக்கின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் குழந்தைகள், பொதுமக்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் செல்ல வேண்டி உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு தெருநாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.