கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மார்க்கெட் பகுதியில் அதிகளவு தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய்கள் துரத்தி செல்கின்றன. குறிப்பாக இரவு நேரங்களில் மார்க்கெட் பகுதியில் அதிகளவு தெருநாய்கள் உள்ளதால், அவ்வழியாக பள்ளிக்கு சென்று வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் மிகவும் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். மேலும் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது தெருநாய்கள் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.