குரங்குகள் அட்டகாசம்

Update: 2026-02-01 13:27 GMT

பர்கூர் அருகே நந்திபெண்டா, நேரல கோட்டை ஆகிய பகுதிகளில் காப்புகாடுகள் ஆயிரம் ஏக்கருக்கு மேல் உள்ளது. இந்த காப்புகாடுகளில் தற்போது போதிய அளவில் மழை இல்லாததால் வன உயிரினங்கள் விவசாய நிலங்களை நோக்கி செல்கின்றன. அதன்படி பர்கூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் அதிக அளவில் குரங்குகள் புகுந்து, பயிர்களை தின்று அட்டகாசம் செய்கின்றன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அட்டகாசம் செய்து வரும் குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர் வனப்பகுதியில் விட வேண்டும்.

மேலும் செய்திகள்