திண்டிவனம் அடுத்த தழுதாளி கிராமம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளுக்கு நாள் நாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இவை சாலையில் செல்லும் பொதுமக்கள், குழந்தைகள், இருசக்கர வாகன ஓட்டிகளை துரத்தி, துரத்தி கடிக்கின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் செல்ல அச்சமடைந்து வருகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.