பெருமாநல்லூர் அருகே, தொரவலூர் மற்றும் மேற்குபதி ஊராட்சி பகுதிகளில் குளங்களை சுற்றிலும் உள்ள ரோடுகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. அவை சாலையில், செல்வோரை விரட்டி சென்று கடிக்கின்றன. இந்த நாய்களால் மக்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.
மேலும் அவை, இருசக்கர வாகனத்தின் குறுக்கே பாய்கிறது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அழகு ராஜா, பெருமாநல்லூர்.