வடக்கனந்தல் பகுதியில் உள்ள கோமுகி அணை அருகே பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகை வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால் அங்கு விஷப்பூச்சிகளின் நடமாட்டமும் அதிகளவில் உள்ளதால் அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடன் உள்ளனர். எனவே செடி கொடிகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.