விருதுநகர் ஆர்.எஸ். நகர் நெடுஞ்சாலை பகுதிகளில் போதிய வேகத்தடைகள் இல்லை. இதனை பயன்படுத்தி சில வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் சாலையை கடக்கும் பிற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் அச்சம் அடைவதோடு விபத்துகளிலும் சிக்குகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சாலையை ஆய்வு செய்து போதிய வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?