விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி யூனியன் நாகம்பட்டியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முற்றிலும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இதனால் இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்பாக இந்த தொட்டியினை அகற்றிவிட்டு புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?