பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் ஏராளமான பயணிகள் பஸ் ஏறி வெளியூர் சென்று வருகின்றனர். இந்நிலையில் இப்பகுதியில் பொதுக் கழிவறை அமைக்கப்படாமல் உள்ளதால் பயணிகள் இயற்கை உபாதை கழிக்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் இலவச பொதுக்கழிவறை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.