கடமலைகுண்டு பாலூத்து ஓடையை ஆக்கிரமித்து முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால் மழைக்காலங்களில் ஓடையில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படுவதோடு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துவிடும். இதனால் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே முட்செடிகளை விரைந்து அகற்றிவிட்டு ஓடையை தூர்வார வேண்டும்.