விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே முஷ்டக்குறிச்சி கிராமத்தில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள மின்கம்பம் முற்றிலும் சேதமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது. இதனால் இதனை கடந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே செல்கின்றனர். மேலும் இதனால் மின்விபத்து ஏற்படும் அபாயம் அதிகளவில் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விபரீதம் ஏற்படுவதற்கு முன்பாக இதனை அகற்றி புதிய மின்கம்பம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.