மதுரை திருப்பரங்குன்றம், திருநகர் பகுதிகளில் ஆபத்தை உணராமல் சில வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர வாகனங்களை அதிவேகத்தில் இயக்கி செல்கின்றனர். இதனால் எதிரே வரும் பிற வாகன ஓட்டிகள் அச்சத்தில் நிலைத்தடுமாறி விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் சாலையை கடக்க காத்துநிற்கும் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து மேற்கண்ட பகுதியில் அதிவேகத்தில் இயக்கும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுப்பார்களா?