அவினாசி தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கென பிரத்தியேகமாக கட்டப்பட்டுள்ள சுகாதார வளாகம் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், அலுவலகத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். எனவே சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை டுக்க வேண்டும்.