நாட்டறம்பள்ளி ஆர்.சி.எஸ். மெயின் ரோடு பகுதியில் ஒரு அரசு வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. அதன் மூலம் ஏராளமான மக்கள் பயன் அடைகின்றனர். ஆனால், அந்த ஏ.டி.எம். மையம் அரசு வேலை நாட்களில் மட்டும் திறந்திருக்கிறது. அரசு விடுமுறை நாள், சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஏ.டி.எம். மையத்தை மூடி விடுகின்றனர். இதனால் மக்கள் அவதிப்படுகின்றனர். மக்கள் நலன் கருதி எப்போதும் நிரந்தரமாக ஏ.டி.எம். மையத்தில் பணப் பரிவர்த்தனை நடக்க திறந்து வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-மோகன்ராஜ், நாட்டறம்பள்ளி.