வாலாஜாவில் இருந்து அம்மூர் செல்லும் சாலையில் அம்மூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அல்லிகுளம் கிராமத்தில் சாலை விரிவாக்கப்பணிகள் நடந்தன. அப்போது கிராமத்தில் இருந்த பஸ் பயணிள் நிழற்குடையை அகற்றினர். ஆனால், தற்போது வரை அந்தப் பகுதியில் பஸ் பயணிகள் நிழற்குடை அமைக்க வில்லை. அல்லிகுளம் கிராமத்தில் அகற்றப்பட்ட பஸ் பயணிகள் நிழற்குடையை மீண்டும் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குணசேகர், அல்லிகுளம்.