பந்தலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அய்யன்கொல்லி அருகே குழிக்கடவு பகுதியில் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணையில் தேங்கும் தண்ணீரை குளிக்க, துணி துவைக்க போன்ற தேவைகளுக்கு அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் தடுப்பணை சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் அதில் தண்ணீர் தேக்கி வைப்பது சவால் ஆகிறது. அத்துடன் தண்ணீரும் வீணாகி வருகிறது. எனவே அந்த தடுப்பணையை சீரமைக்க அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.