திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகா கும்பகுடி எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவை அவ்வழியாக செல்லும் வாகனங்களின் குறுக்கே பாய்வதால், வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயமடைந்து வருகின்றனர். மேலும் கூட்டமாக திரியும் தெருநாய்களால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே தெருநாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.