புதுக்கோட்டை மாநகராட்சியில் இருசக்கர வாகன நிறுத்த கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் முதல் தளத்துக்கு செல்லும் பாதை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனம் நிறுத்த வரும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.