கோவை பாப்பநாயக்கன்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அவை சாலைகளில் நடந்து செல்வோரையும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும் துரத்தி சென்று கடிக்க முயல்கின்றன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். எனவே அங்கு தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.