‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு நன்றி

Update: 2025-12-28 17:39 GMT

திருச்சி கோ-அபிஷேகபுரம் சக்தி நகரில் உள்ள திறந்தவெளி உடற்பயிற்சி நிலையம் அருகே கழிவுநீர் வாய்க்காலின் குறுக்கே புதிதாக பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில் தற்போது விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. எனவே இந்த பாலத்தின் வழியாக கனரக வாகனங்கள் செல்லும்போது இந்த பாலம் இடிந்து விடும் நிலை ஏற்பட்டு உள்ளது என ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விரிசலை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்