தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரத்தில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள கடை வீதி, தர்மபுரி ரோடு, ஆர்.எம். ரோடு, சேலம் ரோடு, பாரஸ்ட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் தெரு நாய்கள் கூட்டமாக சுற்றித்திரிகின்றன. தெருக்களில் கூட்டமாக சுற்றும் தெரு நாய்களால், அப்பகுதி மக்கள் நடந்து செல்லவே அச்சப்படுகின்றனர். நாய்கள் துரத்துவதால், வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த, பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.